வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Karumbu thinna Koolikidaikkum

பாட்டி வைத்தியம்




1 கரும்பு

பொங்கல்னா கரும்பு, பிணம்னா என் மச்சான் தாங்க. ஏன்னா அவனைப் பார்த்தாலே பிணம் மாதிரியே இருப்பாங்க. அதை விடுங்க. கரும்ப பத்தி இன்னக்கி பேசுவோம். என் தம்பி ஒருத்தன் எச்சி கையிலே காக்கா விரட்டமாடாங்க, அதுக்காகவே கரண்டில சாப்பிடுறான். யாருக்கும் கொடுக்காம தின்னுட்டு மிச்ச்சகரும்ப கையிலே புடுச்சிக்கிட்டே இராத்திரிலே படுத்திருந்தாங்க, விடுஞ்சி பார்த்தா, கரும்பு இருக்கு அவன் கையக் கானாங்க. எறும்பு தூக்கிகிட்டு போயிடுச்சி. (கரும்ப விட எறும்புக்கு அவன் கையி இனிப்பா இருந்திருக்குன பார்த்துகங்க)
எல்லாத்துலேயும் கலப்படங்க, கரும்பு கூட இனிக்கிறது இல்ல.

பொங்கலுக்கு கரும்ப கடிச்சி பல்லு போன என் தம்பி, இப்பவெல்லாம் வாய திறக்கிறதில்ல. கரும்பு கம்பு மாதிரி இருந்தா என்னக பண்ணுறது. அடிக் கரும்பு நல்லா இன்னிக்கும்னு சொல்லுவாங்க, ஆனா, எங்க அப்பாவுக்கு அடிக் கரும்ப வச்சி எங்கள அடிக்கிறது நல்லா இனிக்கும்.
என் நண்பன் கரும்பு சாற்ற தலையில தடவ, எறும்பு ஏறி மண்ணைத் தோண்ட ஆரம்பிச்சிடுச்சினா பார்த்துகோங்க. நாம்ப சின்னப் பிள்ளையா இருக்கும்போது அப்பா அம்மா மண்ணுல விளையாடதே மண்ணுல விளையாடதேனு சொல்லுறது இதுக்குத்தாங்க, மண்ணு தலைக்குள்ள போயி, மூளையில உக்காந்துக்கிரும்.

கரும்புள என்ன வைதியமிருக்குனு கேப்பிங்க. இருக்குங்க, நிறையா இருக்கு. கரும்பு சாற்றை, எலும்மிச்ச சாற்றோட கலந்து குடிச்சா, மயக்கம், தலை சுற்றல் உடனே நிற்கும். கரும்போட விலைதான் தலை சுற்றளுக்கே
காரன்னு சொல்லுறது புரியுர்துங்க. கரும்பு சாற்றுள  சக்கரை இருக்கிறதாலே, பெண்கள் சக்கரை வியாதியுள்ள மாமியாருக்கு தினமும் காலையில ஒரு ரெண்டு டம்ளர் கொடுத்தா, ஒரு வாரத்துல பலன் தெரியும்.
கரும்பு சாறு தசைகளை வலுவாகுதுங்க. தினமும் காலையில ஒரு டம்ளர் குடிச்சா, கண், இதயம், கிட்னி மற்றும் மூளைக்கு ரொம்ப நல்லது.
மஞ்ச காமாலைக்கு எலுமிசசையோடு கலந்த கரும்பு சாறு ரொம்ப நல்லதுங்க.
சின்ன பயலுக சும்மா சும்மா அழுதுக்கிட்டிருந்தா, ஒரு பெரிய கரும்ப கையில கொடுங்க, அழுகையையும் நிறுத்தலாம், பல்லும் வலிமையாகும்.

மொத்ததுல கரும்புகிறது இனிப்பாத விசயன் தாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக